Wednesday, November 1, 2017

எண்ணிப் பார்க்கையில்

IndiBlogger - The Indian Blogger Community பத்து விரல் போதுமோ நம்
பாக்கியங்கள் பட்டியலிட?
ஒன்பது கிரகமும் ஒவ்வொரு பக்கம்
பார்ப்பது
எதிர்வரும் துன்பங்கள் எதிர்க்கவோ?
எட்டு திசையும் கொட்டுதோ முரசு
எட்டாத இலக்கில்லை இங்கென்று?
ஏழேதானா வண்ணங்கள் உலகில்
இன்பமான இயற்கையின் எழிலில்?
அறுசுவையும் குறைவதுண்டோ
வாழ்க்கை வழங்கும் விருந்திலே?
ஐந்து பூதங்கள் ஆக்கிய யாக்கை மீண்டும்
ஐக்கியமாகத்தானே இடையில் இந்த நாடகம்?
நான்கு பருவங்கள் துடுப்புப் போட
நகருதோ வருடங்கள் காலக்கடலிலே?
மூன்றாம் கண்ணாய் ஞானமிருந்தால்
பார்க்குமிடமெல்லாம் ஒளிமயமாகாதோ?
இரண்டுதான் கரங்கள் என்றாலும்
உழைப்பில் களிப்பன்றி களைப்புண்டோ?
ஒரு முறைதான் நாம் வாழ்வது அப்போது
ஒழுக்கமாய் இருப்பதுதானே விழுப்பம் தரும்?

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community