Tuesday, June 6, 2017

நீர்க்குமிழியின் கனவு

IndiBlogger - The Indian Blogger Community பருவங்கள் மாறும்
பாதைகள் நீளும்
அலைகள் ஓய்வதேயில்லை

விலங்குகள் ஏதும் இல்லை
விலங்காய் வாழ்வதற்கு
விளக்கங்கள் வேண்டியதில்லை

தர்மம் தெரியாது
பாவம் புரியாது
தனக்காய் வாழ்பவர்க்கு

வயது மட்டும் ஏறும்
புத்தி கொஞ்சமும் வளராமலே
உண்டு உறங்கி எழும் பதர்களுக்கு

நாய் வால் நிமிர்ந்ததில்லை
திருட்டுப்பூனை திருந்தியதில்லை
மறந்தால் அமைதியில்லை

கடலில் கலந்தது ஆறு
கலக்கச் சொன்னது யாரு
உப்பாய் போனது நீரு

பகலில் தொலைத்ததை
இருட்டில் துழாவுவாயா
கனவின்னும் காண்பாயா

ஏட்டில் படிக்காத நோவு
காட்டில் காயும் நிலவு
சோலையில் கூவும் குயிலு

ரசிக்க நினைத்தது மழையை
துளிர்க்கும் இலையை
ருசிக்க முடிந்தது எரிமலை தீயை

நளனும் கோவலனும் நலிந்த நாட்டில்
பராசக்தி அவதரிப்பாளா
நீர்க்குமிழியின் கனவு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community