Tuesday, October 13, 2015

எதுவோ

IndiBlogger - The Indian Blogger Community தானோ அதுவோ எதுவோ 
பொதுவோ தேடவோ 
பாலுக்குள் பதுங்குகிறது 
தயிருக்குள் தடமில்லை 
வெண்ணெயாய் வெளிப்படும் 
நெய்யாய் உருகி மணக்கும் 
கண்ணாமூச்சி ஆடிடும் 
அனலில் தங்கமெனை இடும் 
பனியாய் மலரெனை தொடும் 
அடித்தால் நான் அழுவேன் 
அணைத்தால் சிரித்திடுவேன் 
பிள்ளையை கிள்ளிவிட்டு 
தொட்டிலை ஆட்டிவிடும் 
பொல்லாத திட்டமேனோ 
பிரபஞ்சமே பெரிய சக்தியே 
பேரன்பின் பெருவெளியே 
ஆக்கத்தின் பெருங்கடலே 
உன்னுள் துள்ளும் மீன் நானே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community