Tuesday, October 13, 2015

சொல்வேன்

IndiBlogger - The Indian Blogger Community சொல்வேன் நான் நடந்து வந்த பாதையில் 
புல்லுக்குள் சிரித்திருக்கும் சின்னப் பூக்கள் 
பரவசப்படுத்திய சிறு பறவை குரல்கள் 
காதுக்குள்ளே ரீங்கரிக்கும் மூதுரைகள் 
அதிசயமான அசாதாரண நிகழ்வுகள் 
அன்றாட வாழ்வின் சாதாரண அழகுகள் 
முள் தோலுக்குள் இனிய பலாச்சுளைகள் 
கருங்கல்லுக்குள் ஊறிடும் ஈரச்சுனைகள் 
முன்னோர் பதித்துச் சென்ற சுவடுகள் 
மூத்தோர் சொல்லிச் சென்ற முறைகள் 
என்னை நானாக்கிய ஆயிரம் சிற்பிகள் 
கொஞ்சம் கொஞ்சமாய் சொல்வேன் 
இதுவரை சொல்லிவந்தது போலவே 
கேட்க இத்தனை பேர் இருப்பதனால்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community