Monday, October 12, 2015

நித்தியம்

IndiBlogger - The Indian Blogger Community

பிடிக்கவில்லை 
ஓடும் மேகங்கள் ஒன்றையொன்று 
பிடிக்கவேயில்லை 

முடிக்கவில்லை 
சோலைக்குயில் தொடர்கதையை 
முடிக்கவேயில்லை 

தடுக்கவில்லை 
மலர்கள் மதுவுண்ணும் வண்டுகளை 
தடுக்கவேயில்லை 

எட்டவில்லை 
கடலலைக்கு கரையின் நெஞ்சம் 
எட்டவேயில்லை 

நிறுத்தவில்லை 
மாறன் மலர்க்கணைகளை 
நிறுத்தவேயில்லை 

நிற்கவில்லை 
கடலோடு நதிகளின் சங்கமம் 
நிற்கவேயில்லை 

முடியவில்லை 
இரவு பகலின் கண்ணாமூச்சி ஆட்டம் 
முடியவேயில்லை 

புரியவில்லை 
பாதையிது எங்கு போகுமென்று 
புரியவேயில்லை 

தெரியவில்லை 
தேடல் என்று முடியுமென்று 
தெரியவேயில்லை 

நிகழவில்லை 
இறப்பேயில்லாத பிறப்பு 
நிகழவேயில்லை 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community