Monday, October 12, 2015

தயிர்

IndiBlogger - The Indian Blogger Community  

மடி சுரந்த பாலாக இனித்திருந்தேன் 
மனம் திரியாமலே தனித்திருந்தேன் 
என் துணையோடேஇணைந்திருந்தேன் 
சுயம் தொலைத்திட துணிந்திருந்தேன் 
என்னே மாயமிதோ கனிந்துவிட்டேன் 
முன்னுரு மாறிடவே கெட்டிப்பட்டேன் 
உரைகுத்திய கெட்டிக்காரத்தனத்திலே 
மணங்கூடி உயர்ந்தேன் ஊட்டச்சத்திலே 
மீண்டும் பாலாய் மாறாத தயிரானேன் 
யாண்டும் ஞாலம் பெருக உயிரானேன் 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community