Monday, October 12, 2015

காத்திருப்பேன்

IndiBlogger - The Indian Blogger Community சிந்திக்க ஆரம்பித்தேன்
சித்தம் கலங்கியதே
சிரம் சுடுகிறதே
சித்திரம் கலைகிறதே
சித்தாந்தம் மாறுதே
சிலம்பாடுதே வாதம்
சிலையும் கலையும்
சிரிப்பும் கவலையும்
சிற்றின்ப வேட்கையும்
சிறுமையும் வெறுமையும்
சிலிர்க்காத மனிதமும்
சிறக்காத சிற்றுண்டியும்
சிலவும் பலவும்
சிறிதும் நினையாமலே
சிந்தித்த பின்னாலே
சிக்கான நூலானதே
சின்னாபின்னமானதே
சிறு தூக்க சுகமும்
சிவந்தன கண்ணும்
சிறைப்பட்ட மனமும்
சில்லென்ற பனியில்
சிங்கார கற்பனையில்
சிக்காத சுரமொன்று
சிந்தனை தருமென்று
சிறுமிக்கு தெரியாதோ
சிப்பிக்குள் முத்தாய்
சிறப்பாய் உருவாக
சிறு யுகம் காத்திருப்பேன்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community