Monday, October 12, 2015

புதுமை

IndiBlogger - The Indian Blogger Community



சொல்லத்தான் வேண்டும் ஆராய்ச்சி இருகூர் கத்தியென்று 
ஆர்வத்தில் பேரறிவில் கண்டுபிடிப்பு தரும் போதையில் 
என்னென்னவோ கண்டு பிடித்தார் அவரே பின் நொந்தார் 
வெடியை கொடுத்து வினையை உருவாக்கியவர் பெயரில் 
பரிசு ஒரு பரிகாரந்தானோ மனதசாட்சியின் உறுத்தலோ 
அணுவை பிளந்தவரறிவாரோ பேரழிவு ஆயுதங்கள் வருமென 
பிணி தீர்க்கத்தான் என்று இன்னும் தொடருது பல ஆராய்ச்சி 
பலாபலன்கள் பாதகமாய் இருக்க நிறையவே சாத்தியக்கூறு 
ஏன் எதற்கு எப்படி என்று கேட்கச் சொன்னவனுக்கு விஷம் 
பகுத்தறிவை தூண்டியதால் மடமை இருள் அகல விடிந்தது 
விவகாரமான சமூக பழக்கங்கள் போட்ட கொட்டம் முடிந்தது 
மாட்டுத்தொழுவினில் கட்டும் பிராணியல்ல பெண்ணென்றான் 
மேய அனுப்பிவிட்டானா புரிந்துகொள்ளாமல் போனாரே 
ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை காண் 
நடையிலே உடையிலே நாகரிக போக்கிலே 
சரி நிகர் சமானமாய் சேர்ந்து பாடம் படிக்கிறாள் 
ஒன்றாய் அமர்ந்து அலுவலகத்தில் பணி புரிகிறாள் 
ஊரடங்கிய பின்னும் உழைக்க அனுமதி உண்டின்று 
புகை ஊத பழகிவிட்டாள் மது அருந்த தயக்கமில்லை 
தோளில் கைபோட்டு தோழமை கொண்டாடுகிறாள் 
இடுப்பை அணைத்தால் இம்சையாய் இல்லை 
இழுத்த இழுப்பிற்கு மறுக்காமல் இசைகிறாள் 
கண் போன போக்கில் மனம் போவதும் தடம் பிறழ்வதும் 
ஆணின் தனி உரிமையென்று யார் சட்டம் போட்டது 
வானமே இவள் எல்லை போடும் தடைகள் பொடிபடுமே 
குடும்பத்தளை அறுத்தவள் தனிக்காட்டு ராணியிவள் 
ஒப்பற்ற ஒளியாய் உதித்தவள் நால்வகை சேனையொடு 
கோலோச்சப் பிறந்தவள் கருப்பையை பணயம் வைத்தாள் 
பொய்மானை விரட்டும் பந்தயத்தில் பித்தாய் ஓடுகிறாள் 
பூவுலகை காரிருள் கருநாகம் கவ்விட காத்திருக்குதே 
கிரகணங்கள் விலகாது போகாது என்பதே ஆறுதல்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community