Tuesday, October 13, 2015

ஒரு நாளை

IndiBlogger - The Indian Blogger Community வருடத்தில் ஒரு நாளை
கொண்டாடிக் கொள்வோமோ
மொத்தமாய் மீதி நாளை
தாரை வார்த்திடவோ
தரணியில் ஆடவர்க்கே
உரிமைக்குரல் உயர்த்தவும்
உயர்வை எண்ணி பூரிக்கவும்
கூட்டம் கூட்டி களிக்கவும்
பேட்டி அளித்து முழங்கவும்
சாதனை பட்டியல் வாசிக்கவும்
எட்டிய சிகரம் விளக்கவும்
இன்னும் கனவுகள் விரியவும்
ஒரு நாள் ஒதுக்குதல் அநீதி
வருடம் முழுதும் விழித்திரு
மணம் வீசி முகிழ்த்திரு
மறக்கவிடாதே மற்ற நாளில்
மாதர் தம் மகிமைகளை
மடமையில் மங்கிடாத 
மாபெரும் மாண்பினை
மறந்துவிடாதே தினமும் மலர
மங்கையே மாசறு மணியே
மணம் குன்றாத மகிழம்பூவே
மானிட சொர்க்கத்தின் மையமே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community