Monday, October 12, 2015

வினை

IndiBlogger - The Indian Blogger Community புள்ளி போல் செய்த தவறு வருடங்கள் 
தள்ளி பூதாகரமாய் வளர்ந்துவிடுமே 
கள்ளிச்செடி ஒன்றினைப் போலவே 
முள்ளாய் கிழித்து ரணமாய் ஆக்குமே 
பள்ளிப்பருவ ராமனும் விளையாட்டாய் 
எள்ளி நகைத்தான் மந்தரை கூனலை 
அள்ளிக் கொண்டான் அத்தனை இடரை 
சுள்ளியில் பற்றியெரியும் கானகத்து 
கொள்ளியாய் நிகழ்ந்தது பாரத யுத்தம் 
கிள்ளிவிட்டது பாஞ்சாலி சிரிப்பொலி 
புள்ளினம் கூவும் காலை செய்த வினை 
வெள்ளி முளைக்கும் வேளை விடியும்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community