Tuesday, October 13, 2015

நாடகம்

IndiBlogger - The Indian Blogger Community நுனிப்புல் அழுதது அழகாய்
இரவின் பிரிவில் வருந்தமாய்
ஆற்ற நினைத்தது ஆதவன்
கரம் நீட்டியது ஆதரவாய்
கண்ணீர் துடைத்திடவே
இரவிற்காக காத்திருக்க
வந்தது வேறொரு இரவு
எதிர்பாரா விரைவுடனே
பசு ஒன்று மேய்ந்ததிலே
பகல் கனவு முடிந்தது

ஆசைகள் தொடரும் பாரிலே
ஆண்டவன் விரும்பும் வரையிலே
இதை புரிந்தும் புரியாமலுமாய்
மீதமிருக்கும் புல் இரவிற்காக
அழுகிறது விடிகாலையிலே
ஒத்தை மாடு வந்திடலாம்
மந்தையாய் வந்தும் மேயலாம்
மேய்ப்பவன் மனம் போனபடி
திரையோ மூடி மூடி விலகும்
தினமும் நாடகம் தொடரும்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community