Tuesday, October 13, 2015

கனவுகள்

IndiBlogger - The Indian Blogger Community 

கனவுடன் பரிச்சயம் பிறந்த உடனே
நரி விரட்டுதென்பார்கள் கிழவிகள்
கள்ளமில்லா வயதில் கண்கள் விரிய
கதை சொல்வர் கண்ட பீதி கனவுகளை
புரியத் துவங்கும் வயதில் விழிகளில்
ஏற்றுவர் கனவுகளை விழித்துக் கொண்டே
பருவ வயதில் பல வண்ணக் கனவுகள்
பட்ட பிறகு மிச்சம் கொஞ்சம் கனவுகள்
பளபளப்புக் குறைந்து திரும்பிப் பார்க்க
அசை போட்டு மகிழும் சங்கதிகள்
அப்பட்டமாய் தெளிந்த நனவுகள்
இன்னும் இருக்கு ஆசை நினைவுகள்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community