Monday, October 12, 2015

தெரியாத சங்கதி நிறைய

IndiBlogger - The Indian Blogger Community நகையாடல் செய்தேன் என்னை நானே 
நரை வந்தும் தெரியாத சங்கதி நிறைய 
பூரி சப்பாத்திக்கு தோதானது சன்னா 
தேங்காய் சட்னிக்கு பொட்டுக்கடலை 
பால் தயிர் பழைய சாதமுடன் பக்கோடா 
மூலப்பொருள் கொண்டைக்கடலையே 
முளைக்கும் விதம் மூளை நினைக்கலையே 
பட்டாணி மொச்சை போலொரு காயாய் 
கருதிய மடமை புரிந்து போனது நேற்று 
பட்டுப்பூச்சி கூடு போல் காய்களுடன் 
கட்டு கட்டாய் குட்டைச் செடிகள் 
சந்தையிலே விற்றிருக்க விநோதமான 
தாவர மர்மம் அறியப்புகுந்த போது 
அடடா ஒய்யாரமாய் உள்ளமர்ந்து 
ஒத்தை கொண்டைகடலை தானே 
பச்சையாய் சிரித்தது எனைப் பார்த்து 
ஆச்சரியங்களுக்கிங்கு முடிவுண்டோ 
உறங்கும் உண்மைகள் எத்தனையோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community