Monday, October 12, 2015

பயிர்

IndiBlogger - The Indian Blogger Community

ஆனந்த விளையாட்டொன்றை ஆடிடவே 
அவள் வந்தாள் ஆர்வம் தளும்பிடவே 
சீதனமாய் ரத்தினங்கள் கைநிறையவாம் 
அவன் வேகம் சற்றும் சளைக்காதவனாம் 
தானமாய் மேலும் மணிகள் தந்தானாம் 
கண் மயங்கி கலந்தனர் மணிகளை 
கை நிறைய அள்ளினர் கோர்த்தனர் 
ஈடில்லா ஆரமொன்றை கண்டனர் 
ஈரைந்து திங்கள் சென்ற பின்னே 
நிறமும் உயரமும் என்னவாயிருக்குமோ 
நோயும் பலமும் எப்படியிருக்குமோ 
காது மடலின் வளைவிலே 
கண்ணின் நீண்ட இமையிலே 
செதுக்கிய மூக்கின் நுனியிலே 
எழும்பும் அழுகை குரலிலே 
எட்டிப் பார்ப்பதாரோ ஆரோ 
எவ்வழி பாட்டியோ தாத்தாவோ 
எத்தனை தலைமுறைக்கு முன்னுதித்த 
ஏதோவொரு மாமனோ மச்சானோ 
என்னவொரு விந்தையிதுவோ 
ஆலின் ஆழ விழுதுகளோ 
பாசவயலின் பயிர்தானோ 
பசுமையானதே பரம்பரையே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community