Tuesday, October 13, 2015

புலன் வென்று

IndiBlogger - The Indian Blogger Community பங்கேற்க பொது நியமங்கள் 
பல மதங்களில் உண்டிங்கு 
விரதமிருப்பது அதிலொன்று 
வயிறு நிறைய விருந்துண்டு 
வருந்துகின்ற உடலுறுப்புகள் 
ஓய்வெடுக்க வாய்ப்பல்லவோ 
ஊனுக்குள் உய்யும் உயிர் 
புதுப்பிக்கும் யுக்தியல்லவோ 
சிலிர்த்தெழும் தருணமல்லவோ 
முக்கடல் சூழ் குமரிமுனையில் 
பாறையொன்றின் மீதமர்ந்து 
முழுதாய் மூன்று நாட்கள் 
நீரும் ஆகாரமுமின்றி 
விவேகானந்தர் விரதமிருந்து 
சிகாகோ சென்றடைந்து 
சிங்கமென கர்சித்த உரை 
உலகெலாம் கேட்டதுவே 
புலன் வழி சென்று வீழ்வதும் 
புலன் வென்று சாதிப்பதும் 
சரித்திரம் புகட்டும் பாடந்தானே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community