Monday, October 12, 2015

எவளோ இவள்

IndiBlogger - The Indian Blogger Community கையில் பிடிப்பேனோ கானல்நீரை 
கனவில் வந்த செந்தாமரையை 
ஆலோலமென கூவிய வள்ளியோ 
அர்ச்சுனனை அடைந்த அல்லியோ 
சூடிக் கொடுத்த பாவை கோதையோ 
குழல் கேட்டு மயங்கிய ராதையோ 
பொன் மானைக் கேட்ட சீதையோ 
மோதிரம் தொலைத்த சகுந்தலையோ 
நளனைத் தொலைத்த தமயந்தியோ 
சொக்கேசனின் மதுரை மீனாளோ 
அவள் தோள் மீதமர்ந்த கிள்ளையோ 
எகிப்திய அழகி கிளியோபாத்ராவோ 
எவளோ இவள் எக்காவிய நாயகியோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community