Wednesday, May 29, 2013

அந்த வரம்

IndiBlogger - The Indian Blogger Community தினம்தினம்தான் சூரியன் உதிக்கிறது
உலகினில் இறப்பும் பிறப்பும் நடக்கிறது
பூவாய் மலர்ந்து பொலிவாய் திகழ்ந்து
காற்றெங்கும் நறுமணத்தை நிறைத்து
நோகாமல் நொறுங்காமல் வதங்காமல்
உதிர்கின்ற பேர் ஆசீர்வதிக்கப்பட்டவரன்றோ
காந்தியத்தில் ஊறி கதருடுத்தி உழைத்து
நேர்மையும் நன்னெறியும் உயிர்மூச்சாகி
அடக்கமும் அமைதியும் அணிகலனாகி
பேரவா பொறாமை வன்முறையறியா
நோயென்றும் நொடியென்றும் என்றும்
படாமல் படுத்தாமல் பாசமலர்கள்
முகம் பார்த்து உறவாடிப் படுத்து
விடியும் நேரம் துயில் கலையாமல்
பெருவெளியில் பறந்து சென்றுவிட்டார்
பெரியவர் தொன்னூற்றியொன்று வயதினர்
என் துணைவரை ஈன்றவர் பாக்கியவான்
அந்த வரம் வாரிசெங்களுக்கும் வாய்க்கட்டும்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community