Wednesday, March 27, 2013

புதிரோ

IndiBlogger - The Indian Blogger Community பாசம் பக்கத்தில் பார்வையில் ஒரு காலம்
குரலாய் குறுஞ்செய்தியாய் கணிணித் திரையில்
குறுகிவிட்ட கலிகாலம் கண் முன்னே காண்பது
முதுமையில் தனிமை அக்கரையில் சொந்தங்கள்
அக்கறையை அருகிருந்து காட்ட இயலாமை
எதிர் வீட்டு முதியவர் புற்று நோய் முற்றி
ஐந்தாறு மாதமென கெடு சொன்ன பின்னே
இரவும் பகலும் குடித்தழிகிறார் அதிக வலி
தனிமையா முதுமையா பொல்லாத நோயா 
ஆண்டவன் கணக்கும் மனிதன் போக்கும் புதிரோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community