Thursday, March 21, 2013

பாவமும் புண்ணியமும்

IndiBlogger - The Indian Blogger Community சேர்ந்திடும் பாவமும் புண்ணியமும்
சித்ரகுப்தன் கணக்குப் புத்தகத்தில்
கண்ணுக்குத் தெரியாத நீதியொன்று
போகுமுன்னே பலனை தந்துவிடும்
விந்தையான பல வழிகளிலே இது போல்-
களைப்பிலே ஆற்றங்கரை மர நிழலிலே 
தூங்கிவிட்ட பால்காரன் பணப்பையை
குரங்கொன்று கவர்ந்து கிளை மேலேறி
காசுகளை தரையில் ஒன்றும் ஆற்றில் ஒன்றுமாய்
வீசியதில் தண்ணீர் கலந்து விற்ற பாலின் 
லாபக்கணக்கு நேரானது கேட்டதுண்டு
முற்பகல் செய்தது பிற்பகல் விளைந்தது

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community