Saturday, January 21, 2012

பதிகள்

IndiBlogger - The Indian Blogger Community
அவருக்கு கொத்தமல்லி துவையல் பிடிக்கும்
தலை நிறைய மல்லிகைப்பூவை சூட்டி
தழையத் தழைய பட்டுடுத்தினால் பிடிக்கும்
காப்பியில் சீனி தூக்கலாய் இருக்க வேண்டும்
கலைந்து கொண்டிருக்கும் அந்த நாள் சித்திரம்
காணாமல் போய்க்கொண்டிருக்கும் பழைய பத்தினிகள்
அவளுக்கு காப்பி மிதமான சூட்டில் இருக்க வேண்டும்
உடுப்பை சுருக்கமின்றி தேய்த்து வைக்க வேண்டும்
அவள் பேசும் போது குறுக்கிடக்கூடாது சொன்னதை
சிரமேற்கொண்டு கச்சிதமாய் முடித்திட வேண்டும்
கூடச் சென்று வாங்கியதை சுமந்து வரவேண்டும்
கொடுத்துவைத்தவர்கள் பூரிப்பில் இன்று பதிகள்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community