Sunday, October 9, 2011

பாக்கியம்

IndiBlogger - The Indian Blogger Community
இளமையாய் மனசிருக்கு
எண்ணத்தில் துள்ளலிருக்கு
ஆனாலும் என்ன செய்ய
சபையில் நுழையும்போது
முடியில் பரவிய நரையும்
முகத்தில் முதிர்ச்சியும்
முன் வந்து கிழவியென
கட்டியம் கூறுதே
ஆயின் சில நொடி பேச்சில்
தெளிவாய் புரிந்துவிடும்
கிழவியல்ல குமரியென
இன்னும் கூட குழந்தையென
குறை தீர்ந்திடுமெனக்கு
போதும் இந்த பாக்கியம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community