Friday, September 16, 2011

பலன்

IndiBlogger - The Indian Blogger Community
பொழுது போவதைத் தவிர
பலன் இன்னும் பல இருக்கு
பச்சைப் புல்லில் சிறிது நேரம்
பூனைத் தூக்கம் போட்டபின்பு
பாதம் புதைய மணலில் நடந்து
பல கணம் கடல் நீரில் நின்று
பரவசமாய் மாலையில் மயங்கி
பஞ்சாய் மனம் லேசாகி பறக்க
பகையும் புகைச்சலும் மறைய
பட்டாணி சுண்டல் வேர்க்கடலை
பஜ்ஜி பொரித்த சோளமும் தின்று
புத்துணர்வோடு எழுந்து நடந்து
புலரும் புதுக் காலையின் சவால்களின்
பயம் தொலைத்து கூட்டை அடையலாம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community